* இலங்கையில் இன்றைய நாளில் இரவு10:30 நிலவரப்படி மேலும் 11 COVID19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
> இன்று அடையாளம் காணப்பட்ட 4 நோயாளிகள் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஜா-எல சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள்.
* மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 660 ஆக உயர்வடைந்துள்ளது.
* கடந்த 24 மணித்தியாலங்களில் 3 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
* 139 தொற்றாளர்கள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.
* தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் 514 பேர்.
* அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை.
* மேலும் 250 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.
* இதுவரை 7 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.
1st 100 Patients - 57 days
2nd 100 Patients - 19 days
3rd 100 Patients - 9 days
️4th 100 Patients - 4 days
️5th 100 Patients - 2 days
6th 100 Patients - 2 days
மேலதிக தகவல்கள் :
1] நேற்றைய தினம் மாத்திரம் 1,500கும் மேற்பட்ட PCR சோதனைகள் நடத்தபட்டுள்ளன.
2] இதுவரை 21,000கும் மேற்பட்டோர் PCR மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
3] கொழும்பு மாவட்டத்தில் 150கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
4] மொத்தம் 226 கடற்படை வீரர்கள் இதுவரை கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
> அவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் & 79 பேர் விடுமுறையில் இருந்தவர்கள்.
> கோவிட் 19 உடன் அனுமதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் பெரும்பாலானோர் கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை" என்று கடற்படை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
5] கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
6] இதற்கிடையில் இதுவரை எந்த காவல்துறை அதிகாரியும் கோவிட் 19 நோயால் கண்டறியப்படவில்லை என்பதை போலீஸ் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்
7] நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான மருத்துவமனை ஐ.டி.எச்(IDH) கொழும்பு இப்போது 141 நோயாளிகளால் நிரம்பியுள்ளது.
8] ஊரடங்கு சட்டத்தை மீறிய 42,000கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.
9] 11,000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.
இலங்கை தரவுகள் LK
#660 #139 #07 #514
Infected Recovered Deaths In Active
உலக தரவுகள் 🌎
#3,225,583 #229,123 #1,007,134
Total Cases Deaths Recoverd

0 Comments