* இலங்கையில் இன்றைய நாளில் இரவு10:30 நிலவரப்படி மேலும் 25 COVID19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

  > இன்று அடையாளம் காணப்பட்ட 5 நோயாளிகள் கடற்படை வீரர்களோடு தொடர்பு காணப்பட்டவர்கள்.
 > மூவர் கடற்படை வீரர்களாவர்.
 >  ஒருவர் கொழும்பை சேர்ந்தவர்
  (மற்றையவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிடவில்லை)

* மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690 ஆக உயர்வடைந்துள்ளது.

* கடந்த 24 மணித்தியாலங்களில் 8 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

* 162 தொற்றாளர்கள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.

* தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் 521 பேர்.

* அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை.

* மேலும் 145 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.

* இதுவரை 7 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

               1st 100 Patients - 57 days
               2nd 100 Patients - 19 days
               3rd 100 Patients - 9 days
               ️4th 100 Patients - 4 days
               ️5th 100 Patients - 2 days
               6th 100 Patients - 2 days

மேலதிக தகவல்கள் :
1] நேற்றைய தினம் மாத்திரம் 1,500கும் மேற்பட்ட PCR சோதனைகள் நடத்தபட்டுள்ளன.

2] இதுவரை 22,400கும் மேற்பட்டோர் PCR மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

3] கொழும்பு மாவட்டத்தில் 150கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

4] மொத்தம் 250கும் அதிகமான கடற்படை வீரர்கள் இதுவரை கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

5] கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

6] மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7] ஊரடங்கு சட்டத்தை மீறிய 43,000கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.

8] 12,000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

இலங்கை தரவுகள் LK
#690             #162                 #07            #521
Infected     Recovered      Deaths      In Active

உலக தரவுகள் 🌎
#3,351,452    #239,632      #1,060,612
Total Cases     Deaths        Recoverd