அமெரிக்காவிற்கு குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து நிறைவேற்று ஆணையை வெளியிடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் படையெடுப்பை எதிர்கொண்டு அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக ஜனாதிபதி ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்19, அல்லது கொரோனா வைரஸ், ஏற்கனவே அமெரிக்காவில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து ஒன்பதாயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க எண்ணெய் விலைகள் பல ஆண்டுகளாக ஒரு சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.